தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்தில் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 1.13 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் உரிமைத்தொகை பெறாத குடும்பத் தலைவிகள் உரிய காரணத்துடன் மேல் முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் மேல்முறையீடு செய்த தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு அடுத்த பத்து நாட்களில் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதில் தேர்வான குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதத்தில் இருந்து வழக்கம் போல வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். மேலும் அடுத்த ஆண்டிலிருந்து மாத துவக்கத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.