மகர ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு இறைவன் அருளால் அற்புதம் நிகழும் நாள் என்றே சொல்ல முடியும். நட்பு வட்டம் இன்று விரிவடையும். கலந்துரையாடலின் போது ஏற்பட்ட சிக்கல்கள் கண்டிப்பாக விலகி விடும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபட வேண்டி இருக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். இந்த நாள் இடம் பூமியால் லாபம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி சேமிக்க வேண்டும் என்று முடிவு எடுப்பீர்கள். யோசிக்காமல் செய்த காரியத்தில் கூட வெற்றி ஏற்படும்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பண பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இன்று பெண்களுக்கு மனக்குழப்பம் விலகி செல்லும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

சிந்தித்து எடுக்கும் முடிவுகளால் வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருங்கள். கல்வி பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கல்வியில் சாதிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்