மகரம் ராசி அன்பர்களே,

இன்று விரயங்கள் எல்லாம் சுப விரயமாக மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஆலய வழிபாடு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். நினைத்தபடி எல்லாம் சிறப்பாக அமையும். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மாற்று மதத்தினர் கை கொடுத்து உதவுவார்கள். வீன் அலைச்சலை மட்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். வியாபாரம் விரிவாக்கம் செய்யும் விஷயங்களில் ஆர்வம் செல்லும். மாலை நேரம் மகிழ்ச்சியாக இருக்கும். இடையூறுகள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் ஏற்படலாம். இன்று பெண்கள் எதிலும் அவசரப்படாமல் இருக்க வேண்டும். காரியங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்ப முன்னேற்றத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

இன்று மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டும். பொறுமை காப்பது அவசியம். உற்சாகமாக காணப்படுவீர்கள். சக நண்பர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்