
இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படுவதால் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஒரு இடத்தை குறிப்பிட்டு பயனர் ஒருவர், போலீஸ் இருப்பாங்க.., ஹெல்மெட் போடுங்க என்று மேப் செய்துள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை x தளத்தில் பகிர்ந்துள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, ஹெல்மெட் விழிப்புணர்வு சார்ந்த அடுத்த பிரச்சாரத்தில் நமது போக்குவரத்து காவலர்கள் இது போன்ற முயற்சியை முன்னெடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.