
சென்னை மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் கோடை விடுமுறையின் போது தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் எண்ணூர் பகுதிக்கு சென்ற நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற 21 வயது வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இவர் சிறுமியிடம் பலமுறை ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இந்த சிறுமி கடந்த மாதம் கோடை விடுமுறைக்காக அங்கு சென்ற போதும் இது தொடர்ந்தது. இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது