மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாசி, சமீபத்தில் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். ஆனால், அவர் தற்போது ஒரு சட்ட பிரச்சனையில் சிக்கியுள்ளார். கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் பங்கேற்றதற்கான வழக்கில் அவர் சிக்கியிருந்தார். இதற்கான விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில், எர்ணாகுளத்தில் காரில் சென்றபோது அவரது கார் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது பஹீம் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, எர்ணாகுளம் மத்திய போலீசாரால் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அலுவலர், நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக (சஸ்பெண்ட்) ரத்து செய்தார். ஓட்டுநராக சாட்சியளிக்கும் உரிமம் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.