மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2 ஆம் தேதியே நடைபெற உள்ளது. இதனை அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களை கவரும் வகையில் பாஜக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதனபடி பாஜக தேர்தல் வாக்குறுதியில், 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்படும். மேகாலயாவில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 மதிப்புள்ள பத்திரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.