இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஜியோவிற்கு வாடிக்கையாளர்கள் அதிகம். ஆனால் ஜியோ சமீபத்தில் தனது மொபைல் கட்டண விலையை உயர்த்தி பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதன்படி கடந்த ஜூலை மூன்றாம் தேதி முதல் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. OTT நன்மைகளுடன் கூடிய பொழுதுபோக்கு திட்டங்களும் திருத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் சில திட்டங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. முன்பு 21 பொழுது போக்கு திட்டங்கள் இருந்த நிலையில் தற்போது அவை ஏழாக குறைக்கப்பட்டுள்ளது மீண்டும் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.