
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது காவலர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர் குற்றங்கள் குறைய வேண்டுமென்றால் காவல்துறை மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம். பொதுமக்கள் காவல்துறையிடமும் காவல்துறை பொதுமக்களிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வது அவசியம்.
சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். குற்ற சம்பவம் நடந்தால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிற்பவன் நான் கிடையாது. கவன குறைவாக சில இடங்களில் நடைபெறும் குற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அதனை திருத்திக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் மக்களாட்சியில் எல்லோருடைய கருத்துக்கு மதிப்பளிக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி செயல்படுகிறது என்று கூறினார்.