திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 500 கோடி வரை ஊழல் நடைபெற்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம், இரட்டை இலை சின்னத்திற்கான சிக்கல் என அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து   இபிஎஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “ஏழைகளுக்கான திட்டத்தில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுகதான் என்று சாடினார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுகவின் ஆட்சிதான் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.