
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூரில் பிளக்ஸ் பேனர் விழுந்து பைக்கில் சென்றவர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே படூர் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பலத்த காற்று வீசியதால் பிளக்ஸ் பேனர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீது விழுந்தது. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த அந்த நபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையோரம் இருக்கும் பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.