உத்தரபிரதேசம் நொய்டாவில் மாநில அரசு சார்பாக திரைப்பட நகர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு உள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இரவு “பேஷன் ஷோ” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் பெரும்பாலான மாடல் அழகிகள் வித விதமான ஆடை அணிந்து ரேம்ப் வாக் வந்தனர்.

அதன்படி 24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப் வாக் சென்றபோது எதிர்பாராத வகையில் அங்கிருந்த இரும்பு தூண் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வன்சிகா சோப்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து பேஷன் ஷோ’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது “பேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆகவே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்” என்று கூறுகின்றனர்.