ஒடிசா மாநிலம் கஞ்சம் என்னும் மாவட்டத்தில் சம்ர்ஜோலா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று எதிர்பாராத விதத்தில் திடீரென எதிரே வந்த லாரி மோதியது. இதனால் டேங்கர் லாரி சாலையோரத்தில் இருந்த டீக்கடையின் மேல் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு 13 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு படுகாயமடைந்த 13 பேரை காவல்துறையினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைப்பு சென்று அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். தற்போது இருவரின் நிலைமை கவலைக்கிடமாய் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.