சேலம் 4 ரோடு பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அறிவாலையை எடுத்து பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் எருமபாளையம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கோகுல் (23) என்பது தெரிய வந்தது.

அறிவாளால் வெட்டப்பட்ட பெண் பள்ளப்பட்டியை சேர்ந்த பிரியா (29) என்பதும் தெரிய வந்தது. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் கணேஷ் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் கணேஷ் இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பிரியா பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் அப்போது கோகுலுக்கும் பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கோகுளுடன் பேச பிரியா கொடுத்துவிட்டார். மேலும் பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோகுல் பிரியாவை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.