சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியின் நான்கு எம்எல்ஏக்கள் வெளி நடப்பு செய்தனர். ஆளுநர் திரும்பி அனுப்பிய பத்து மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியதை எதிர்த்து பேசிய நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக திமுக அரசு மாற்றி விடக்கூடாது. ஆளும் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம் என கூறி வெளிநடப்பு செய்தார்.