உத்தரபிரதேசம் பரபங்கி அடுத்த மவுகரியா பகுதியில் வசித்து வருபவர் 65 வயதான மூதாட்டி. இவர் தன் 17 வயதான பிரியன்சு என்ற பேரனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக பிரியன்சு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற காவல்துறையினர், மூதாட்டி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். இந்நிலையில் பிரியன்சு உடல் அழுகி சடலமாக கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பிரியன்சுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் பிரியன்சுவின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெற்றோரை இழந்த பிரியன்சு, தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இதில் பாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 நாட்களுக்கு முன் பிரியன்சு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இறந்த பேரனின் சடலத்தை தினசரி சுத்தம் செய்து புது ஆடைகளை மாற்றி வந்துள்ளார் மூதாட்டி. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.