திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மங்கம்மாள் சாலை பகுதியில் எம்.சாண்ட் குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை அரவிந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சாமுவேல் என்பவர் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சாமுவேல் கல் அரைக்கும் இயந்திரத்தை இயக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை எந்திரத்தில் சிக்கியது.

அப்போது மெஷின் வேகமாக ஓடியதால் சாமுவேல் மெஷினுக்குள் இழுக்கப்பட்டார். இதனால் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சாமுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாமுவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.