தெலங்கானாவின் வாரங்கல் நகரத்தில் உள்ள நியூ ஷயாம்பேட் பகுதியில் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. 7 வயது சிறுமி ஒருவரை 8-10 தெரு நாய்கள் கூட்டமாகத் தாக்கின. இந்தத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சிறுமி தனியாக வீதியில் நடந்து போனபோது, நாய்கள் திடீரென அவர் மீது பாய்ந்து கடித்தன. அவள் தடுமாறி விழுந்தாள், ஆனால் நாய்கள் தொடர்ந்து கடித்து இழுத்தன. அப்போது அங்கு வந்த ஒரு மனிதர் நாய்களை விரட்டி, சிறுமியை மீட்டு, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
వరంగల్ జిల్లాలో విషాదకరమైన ఘటన
వీధికుక్కల దాడి తీవ్రంగా గాయపడిన చిన్నారి
వరంగల్ జిల్లా కేంద్రంలోని న్యూషాయంపేటలో ఒక చిన్నారిపై తీవ్రంగా దాడి చేసిన వీధికుక్కలు
దాడులు జరిగినప్పుడు నామ మాత్రంగా వచ్చి చర్యలు తీసుకుంటున్నారని, తరువాత అసలు పట్టించుకోవడంలేదని ఆగ్రహం వ్యక్తం… pic.twitter.com/8bJJVPqzns
— Telugu Scribe (@TeluguScribe) October 26, 2025
இந்த சம்பவத்தால் மக்கள் கோபமடைந்து, நகராட்சி அதிகாரிகள் தெரு நாய்கள் தாக்குதலைத் தடுக்க வேண்டும் என்று கோருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள், முதியவர்களை இந்த நாய்கள் தாக்குவது அதிகரித்து வருகிறது. அரசு நடவடிக்கை எடுத்தாலும், இந்தப் பிரச்சினை இன்னும் தொடர்கிறது.
