மத்திய ரயில்வே துறை மந்திரியாக இருப்பவர் அஸ்வினி வைஷ்ணவ். இவரது தந்தை தௌலால் வைஷ்ணவ் தற்போது வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவின் காரணமாக ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி பகுதியைச் சேர்ந்த இவர் வழக்கறிஞராகவும் வருமான வரித்துறை ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். மேலும் இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.