அரசு தேர்வுகள் நடைபெறுவதால் பெரியார் பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றப்பட்டு இருப்பதாக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு மே 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அனைத்து தேர்வுகளும் முன்னதாகவே மே 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதல்நிலை மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான பருவ தேர்வுகள் வருகின்ற 24-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் அதாவது ஜூன் 17ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.