மதுரை சின்ன சொக்கிகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ என்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, இளைஞர்கள் தந்தை பெரியாரைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். ஆனால் சில கூட்டம் திட்டம் போட்டு பெரியார் சிலையை அவமதிப்பு செய்கின்றனர். மேலும் பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என்று கூறி அவமதிப்பு செய்தால் அவர்களது கை இருக்காது என்று வைகோ கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது