
சென்னை ஹைகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின் போது உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கருத்து முன் வைக்கப்பட்ட நிலையில் அதற்கு நீதிபதி, அவ்வாறு கட்டுவதாக இருந்தால் அது குறித்து அரசிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு வக்கீல் ஆனந்த் என்பவர் அளித்த பேட்டியில், பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக மருகு சுமார் 7000 சதுர அடி நிலம் உள்ளது.
அங்கு பல அடுக்குகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகளே கட்டலாம். அந்த இடத்தில் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணி மண்டபம் கட்டப்படும். அவர் சமுதாயத்திற்காக செய்த பணிகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக அந்த மணிமண்டபம் இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.