தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சனம் செட்டி. இவர் தமிழில் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு தனியார் அமைப்புடன் இணைந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தின் போது நடிகை சனம் செட்டி பேசியதாவது, நான் ஒரு நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டுமே சோசியல் மீடியாவில் வெளியிடுமாறு கூறுகிறார்கள். நானும் இந்த சமூகத்தில் தான் வாழ்கிறேன். நாளை என் வீட்டில் கூட இது போன்ற ஒரு சம்பவம் நிகழலாம்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்தது போன்று எனக்கும் நடைபெறாது என்பதற்கு என்ன கேரண்டி. சொந்த அப்பாவே  தன் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்கிறார். அப்படி இருக்கும்போது இந்த சமூகத்தில் எங்கே பாதுகாப்பு இருக்கிறது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை. நிச்சயம் இந்த பிரச்சனைகளை பற்றி நான் பேசுவேன். இந்த சமுதாயத்தில் குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதுகாப்பு இல்லை. எனவே பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் ஆணுறுப்பை வெட்டி வீச வேண்டும். ஒருவருக்கு இந்த தண்டனை கொடுத்தால் தான் மற்றவர்கள் இந்த தவறை செய்ய பயப்படுவார்கள். மேலும் நாட்டின் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு நடக்காது என்பதற்கு உறுதி கொடுக்க முடியுமா.? நாட்டில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் எல்லாம் எதற்காக செயல்படுகிறது என்று கூறினார்.