பாட்னாவில் நடந்த பயங்கர சம்பவம் தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது 1500 ரூபாய் கடனை திருப்பி கேட்டு தலித் பெண்ணை தந்தையும், மகனும் சேர்ந்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடமிருந்து தப்பித்து வந்த அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பிரமோத் மற்றும் அன்சு மீது வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.