திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் தமிழ் மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட தமிழர் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் கூறியதாவது, கச்சத்தீவு மீட்பது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கையை எந்த அரசும் எடுக்கவில்லை.

தற்போது தேர்தல் நேரம் யூகமாக மட்டுமே கச்சத்தீவை பயன்படுத்துகின்றனர். கச்சத்தீவு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய இலங்கை அரசுகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தனி சட்டத்தை கொண்டு வருவது அவசியம்.

அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிதிகளை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழகத்தின் அரசியல் கணிக்க முடியாது. எப்போது யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள் எப்போது யாரிடமிருந்து வெளியே வருவார்கள் என்பதை அறிய தேர்தல் நேரம் வரை காத்திருக்க வேண்டும்.

இப்போது கூட்டணி என சொல்லிவிட்டு பிறகு மறுப்பு தெரிவிக்கலாம். எனது அடுத்த கட்ட முடிவு விரைவில் அறிவிக்கப்படும். மக்கள் நலன் சார்ந்த முடிவை எடுப்பேன். அமைச்சர் பொன்முடியின் பேச்சு தெரியாமல் நடந்த சம்பவம் போல தெரியவில்லை.

அமைச்சரின் பேச்சு அருவருக்கத்தக்கதாக உள்ளது. பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அமைச்சரை போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என கூறியுள்ளார்.