
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கீழ் புதிய விண்ணப்பங்கள் கடந்த மே 29ஆம் தேதி முதல் நேரடியாகவும், ஆன்லைனிலும் பெறப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் பெண்கள், கீழே உள்ள தகுதிகள் மற்றும் ஆவணங்களை தவறாமல் கவனத்தில் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகுதியானவர்கள் யார்?
வயது: 21 வயதுக்கு மேற்பட்ட பெண்
ரேஷன் கார்டு: குடும்பத் தலைவியாக பெயர் உள்ளவர் அல்லது தலைவரின் மனைவி
வருமானம்: ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
வருமான வரி: குடும்ப உறுப்பினர்கள் யாரும் வருமான வரி செலுத்தியிருக்கக்கூடாது
வாகனம்: நான்கு சக்கர வாகனங்கள் இல்லாதிருத்தல்
நிலம்: நன்செய் நிலம் 5 ஏக்கர் மற்றும் புன்செய் நிலம் 10 ஏக்கருக்கும் குறைவாக இருக்க வேண்டும்
மின்சாரம்: ஆண்டு பயன்பாடு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும்
ஊழியர் நிலை: அரசு, வங்கி, கூட்டுறவு, உள்ளாட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தகுதியில்லை
சமூக பாதுகாப்பு பெற்றோர்: விதவை, முதியோர், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறுபவர்கள் தகுதியில்லை
திருமண நிலை: திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தகுதியானவர்கள்
தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் கார்டு
2. குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)
3. பிறந்த தேதி ஆதாரம் – SSLC மார்க் சீட் / வாக்காளர் அட்டை / பிறந்த சான்றிதழ்
4. வங்கி கணக்கு விவரம் – பாஸ்புக் முதல் பக்கம்
5. பாஸ்போர்ட் அளவிலான தற்போதைய புகைப்படம்
6. செயல்பாட்டிலுள்ள மொபைல் எண்
7. இறப்புச் சான்றிதழ் – கைம்பெண்களுக்கு
8. மாற்றுத் திறனாளி/திருநங்கை சான்றிதழ் – தேவைப்பட்டால்
9. மின் கட்டண ரசீது – வருடாந்த மின்பயன்பாட்டை நிரூபிக்க
10. நிலம் பற்றிய ஆதாரம் – நில அளவு குறைவாக இருப்பதை நிரூபிக்க
எப்போது தொகை வரும்?
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதி வாய்ந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ₹1,000 தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்கவேண்டியது: அனைத்து ஆவணங்களும் முழுமையாக, சரியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். தவறுகள் உள்ளவையாக இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்போது விலாசத்தில் நேரில் செல்லலாம் அல்லது https://www.tn.gov.in இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.