
மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச பேருந்து திட்டம் மகளிர் உரிமை தொகை போன்ற பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளில் கால் பதித்து வரும் நிலையில் அவர்களுக்கு பயன்படும் விதமாக உத்யோகினி என்ற திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் இந்த திட்டத்தின் மூலமாக கடன் வாங்க முடியும். இந்த திட்டத்தின் மூலமாக 3 லட்சம் வரை கடன் பெறலாம். கைம்பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு இந்த வரம்பு எதுவும் கிடையாது. சிறு தொழில் ஆரம்பிக்க வயது வரம்பு எதுவும் கிடையாது.10 சதவீதம் முதல் 12% வரை வட்டியுடன் கடன் கொடுக்கப்படுகிறது. சிறுதொழில் ஆரம்பிக்க விரும்பும் பெண்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது. பெண்கள் இந்த திட்டத்தை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.