
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தவெக, அதிமுக ஆகிய கட்சிகள் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினர். இந்த நிலையில் மகளிர் தின விழாவில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது, பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகிறார்கள்.
பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான ஆட்சி என பச்சை பொய் கூறுகிறார்கள். மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள். தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதிக்கப்படும் போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள், உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.