பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்திற்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 தனி நபர்கள் உத்தரவாதம், ரூபாய் 25,000 பிணைத்தொகையுடன் லதா ரஜினிகாந்த்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் ஆஜராகாததால் பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து ஆஜரானார். கோச்சடையான் படத்திற்காக ரூபாய் 6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.