
ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 9 முக்கிய கேள்விகளை கேட்டுள்ளனர்.
அவை கொண்டாட்டத்தை எப்போது யார் நடத்த முடிவு செய்தார்கள்? போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? கூட்டத்தை ஒழுங்குபடுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? நிகழ்வில் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனவா?
நிகழ்வின் போது எத்தனை பேர் கலந்து கொள்ளலாம் என முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டதா? காயமடைந்தோர்க்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கப்பட்டதா? இல்லையெனில் ஏன் வழங்கப்படவில்லை?
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது? 50,000+ மக்கள் பங்கேற்கும் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கு ஏதேனும் பொதுவான செயல்பாடு முறை உள்ளதா? இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஏதேனும் அனுமதி கோரப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.