கடந்த சில நாட்களாக பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் சோதனை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பானி பூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் பானி பூரி தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.