இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசியல் பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தற்போது புத்தாண்டை முன்னிட்டு மொபைல் பயனர்களுக்கு பிரதமர் மோடி மூன்று மாத இலவச ரீசார்ஜ் வழங்குவதாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வருகின்றது. மேலும் அந்த செய்தியில் பாஜகவிற்கு ஆதரவாகவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இருந்தாலும் இந்த செய்திக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசின் PIB Fact Check தெரிவித்துள்ளது. மேலும் லிங்கை கிளிக் செய்து விவரங்களை உள்ளிட்டு ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.