ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் எழுச்சி பெற்றது முதல் வருடந்தோறும் டிசம்பர் 31 ஆம் தேதி ஆன்லைன் உணவு ஆர்டர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த அடிப்படையில் நேற்று புத்தாண்டு முதல் நாள் இரவு உணவு விநியோக சேவைகளுக்கான தேவை அதிகரித்தது.

இந்த நிலையில், Zomato தலைமை நிர்வாக அலுவலர் தீபிந்தர் கோயல் தன் அலுவலகப் பணியை விடுத்து, உணவு டெலிவரி செய்ய புறப்பட்ட செயல் பேசுபொருளாகி இருக்கிறது. இதுகுறித்து தீபிந்தர் கோயல் கூறியதாவது “தற்போது நான் சொந்தமாக 2 ஆர்டர்களை டெலிவரி செய்யப் போகிறேன். இன்னும் 1 மணி நேரத்தில் திரும்பி வருவேன்” என தன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு டெலிவரிக்கு புறப்பட்டார்.