அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். புதிய அறிவிப்பு வரும் வரை பழைய கட்டணமே தொடரும் என்றும் ஜனவரி மாதத்திற்குள் அமைச்சர் தலைமையில் அனைத்து துணை வேந்தர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே கட்டணம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பின் பல ஆலோசனைகளுக்குப் பிறகே 50 சதவிகிதம் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் இதுவரை மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.