
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவீதிபள்ளம் பகுதியில் டிகேஸ்வரன்- கிரிஜா தம்பதியினர் வசித்து வந்தனர். கிரிஜா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். குழந்தைகள் இல்லாத காரணத்தால் தம்பதியினர் வளர்ப்பு நாய்களை மிகவும் அன்போடு பேணி வந்தனர். சமீபத்தில் வளர்ப்பு நாய் 5 குட்டிகளை ஈன்ற நிலையில், இன்னும் 2 குட்டிகள் பிறக்கலாம் என கணவன் கூறியுள்ளார். எதிர்பார்ப்புக்கு ஏற்ப 2 குட்டிகள் பிறந்ததாலும், அவை கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்ததாலும் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த கிரிஜா, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், கிரிஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கி, போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இந்த துயரமான சம்பவம், அங்கு உள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.