மகாராஷ்டிரா மாநிலம் பூனே வானவாடி பகுதியை சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு ரேணுகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரேணுகா தனது பிறந்தநாளுக்கு துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் நிகில் துபாய்க்கு அழைத்துச் செல்லவில்லை.

அதோடு ரேணுகாவின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த பரிசுகள் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் உறவினர் வீட்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி அழைத்துச் செல்ல ரேணுகா கேட்டபோதும் நிகில் அழைத்துச் செல்லவில்லை. இதனால் தம்பதிகள் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ரேணுகா நிகிலின் முகத்தில் குத்தியுள்ளார்.

இதில் மூக்கு மற்றும் பல்லில் காயம் ஏற்பட்டு நிகில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரேணுகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.