கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி கோவிலில், நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குநர்–தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட எளிய மற்றும் நெருக்கமான திருமண விழா நடைபெற்றது. திங்களன்று இந்த திருமண புகைப்படங்களை சமந்தா சமூக ஊடகங்களில் வெளியிட்டதுடன், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சமந்தா முன்பு 2017 இல் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2021 இல் விவாகரத்து அறிவித்தனர். இந்த நிலையில் சமந்தாவின் திருமண அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களுக்குள், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தது. டிசம்பர் 1, 2023 அன்று வெளியான அவரது ‘தூதா’ வெப் தொடரின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி அவர் பகிர்ந்த பதிவில்,
View this post on Instagram
“#தூதா என்பது ஒரு நடிகராக நீங்கள் படைப்பாற்றல் மற்றும் நேர்மையோடு எடுத்த தேர்வு வெற்றி பெறும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி. மக்கள் அந்த ஆற்றலை உணர்ந்து உங்களுக்குத் திருப்பித் தருவார்கள். நன்றி! 2 வருட தூதா! இதை சாத்தியமாக்கிய குழுவிற்கு அன்பு,” என்று எழுதியிருந்தார்.
மேலும் இந்தப் பதிவு சமந்தாவின் திருமண அறிவிப்புக்கு அடுத்தே வெளிவந்ததால், சமூக வலைதள பயனர்கள் இதன் நேரத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
