பிரபல நடிகை குறித்து அவதூறாக பேசிய சேலத்தை சேர்ந்த ஏவி ராஜு என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சேரன் வலியுறுத்தியுள்ளார்.

பிரபல நடிகை குறித்த அவதூறு பேச்சுக்கு திரைப்பட இயக்குனரும் நடிகருமான சேரன் எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜு பிரபல முன்னணி நடிகை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார். ஆதாரம் இன்றி பொதுவெளியில் பெயர் குறிப்பிட்டு அவதூறு பரப்பியவர் மீது  காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். நடிகை  குறித்து அவதூறாக பேசிய நபர் மீது நடிகர் சங்கமும் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில், “வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என நடிகர் விஷால் மற்றும் கார்த்தியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.