பிரதமர் நரேந்திர மோடி சுட்ட வடை எனக் கூறி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி, வினோத பிரச்சாரத்தை திமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுக்கூட்டங்கள், பிரச்சார விளம்பரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் நூதன பிரச்சாரம் கவனம் ஈர்த்து வருகிறது.