
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அரசு மருத்துவமனையில் பாக்கியலட்சுமி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று பாக்கியலட்சுமி மூத்த மகனை மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்ப்பது போல வந்த இரண்டு பெண்கள் கடத்தி சென்றுள்ளனர்.
குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சுமார் 7 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர் குழந்தையை கடத்திய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.