கும்பகோணத்தில் உள்ள நவகிரக தலங்களுக்கு செல்ல பிப்ரவரி 24 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரே பேருந்தில் புறப்பட்டு நவகிரக தளங்களுக்கு சென்று விட்டு மீண்டும் பேருந்து நிலையம் வந்தடையும் விதமாக நவகிரக சிறப்பு பேருந்து பிப்ரவரி 24 முதல் இயக்கப்படும்.

இந்த பேருந்து சேவை வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கும்பகோணம் கோட்டை மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயணத்தை மேற்கொள்ள பயண கட்டணமாக நபர் ஒருவர் 750 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பயணத்தை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள்  tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.