மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா சமீபத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த காணொளியில் நபர் ஒரு கூட்டம் மூட்டை மூட்டையாக குப்பைகளை காரில் கொண்டு வந்து மகாராஷ்டிராவில் உள்ள இந்திய நுழைவாயில் அருகே இருந்த கடலில் கொட்டுகின்றனர்.

இந்த காணொளியை பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா மக்களின் இத்தகைய மனநிலை மாறாமல் நகரத்தின் உள்கட்டமைப்பு மாறப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனைப் பார்ப்பதற்கு வருத்தமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளியை பலரும் பகிர்ந்த நிலையில் கடலில் குப்பைகளை கொட்டிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.