
பாமக கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் நேற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வேனில் சிலர் சென்றனர்.
இந்த வேன் சீர்காழி அட்டாகுளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜய் என்பவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு விபத்தில் பலத்த காயமடைந்த சுந்தர், தேவா, முத்துராமன் உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.