மகாராஷ்டிரா மாநிலம் கமலி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மன உளைச்சலில் மது அருந்திவிட்டு யாரிடமும் பேசாமல் இருந்த வாலிபர் காதலியின் இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது காதலியின் உடல் எரிந்து கொண்டிருந்த போது யாரும் பார்க்காத நேரம் அந்த வாலிபரும் தீயில் குதித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் பின்னர் சுயநினைவு இழந்த வாலிபரை மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.