
தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி குறித்து துறை வைகோ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் இருப்பது போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தாலும் திருச்சியில் அதே போல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார். மேலும் பொது துறைகளில் வடமாநிலத்தவர்கள் பணிபுரிவது குறித்து கூறுகையில்,
தென்னக ரயில்வே- ல் தொழிலாளர்கள் பெரும்பாலும் வடநாட்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் பயணிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. மொழி ரீதியாக அவர்கள் சொல்வது புரியவில்லை என்பது போன்ற பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் தமிழ் கற்று வருவதாகவும் கேள்விப்பட்டேன் அது வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும், தமிழகத்தை பொறுத்தவரையில், இவ்வளவு ஏன் திருச்சியில் இருக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களான துப்பாக்கி தொழிற்சாலை வருமானவரித்துறை உட்பட பல துறைகளில் பாதிக்கும் மேல் வட மாநிலத்தவர்களே பணிபுரிகிறார்கள். தமிழகத்தில் இருப்பவர்களுக்கும் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என தனது கருத்தை தெரிவித்தார்.