
நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மும்பை அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்றுக் கொள்ளாதத தான் அவர்களுடைய தோல்விக்கு காரணம். கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு என்பதால் கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் போட்டியில் கேப்டன்ஷிப் மற்றும் நிர்வாகம் மிக முக்கியமானது ஆகும். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கதை முடிந்துவிட்டது. இதுவே இந்த தொடரில் அவர்கள் கற்க வேண்டிய பாடமாகும். அனைத்து வீரர்களும் உங்களுடைய கேப்டனை ஏற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் இந்த வருடம் மும்பை அணியில் அது நடந்ததாக எனக்கு தெரியவில்லை. மேலும் மும்பை அணி ஒரு அணியாக இணைந்து விளையாடதது தான் அவர்களின் தோல்விக்கு காரணம் என்று விமர்சித்துள்ளார்.