நாகப்பட்டினம் அவுரி திடலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது நாகூர் பகுதியை சேர்ந்த சமது என்பவர் சில இஸ்லாமியர்களோடு அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். ஆனால் இணைந்து 12 மணி நேரத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசியவர் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் தன்னுடைய குடும்பமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

சமது நாகூர் தர்காவில் பரம்பரை ஆதீனமாக இருக்கும் தமது அதிமுகவிலிருந்து அமமுகாவுக்கு பின் காங்கிரஸ்க்கும் மாறினார். இந்நிலையில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறியதால் தன்னுடைய குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வை திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார்.