தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் விவசாயி  சின்னத்திற்கு பதில் மைக்  சின்னத்தை கொடுத்ததன் மூலம் பாஜகவின் B டீம், நாம் தமிழர் கட்சி இல்லை என்பது நிரூபணமாகி உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

தென்காசி பிரச்சாரத்தில் பேசிய அவர், தன்னை மிகப்பெரிய தலைவனாக மாற்றுவதற்காக அண்ணாமலை போராடுவதாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் செய்யாத பாஜக இனிவரும் காலங்களில் என்ன செய்யும் எனவும் வினாவினார்.