
பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகைகள் என்னவென்றால் பாசுமதி அரிசி தான். இந்த வகை அரிசிகள் இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைவிக்கப்படுகிறது. அங்கு விளையும் நீளமான, மணமுள்ள அரிசி தான் ஒரிஜினல் பாஸ்மதி அரிசி. ஆனால் ஒரு சில இடங்களில் செயற்கையாக அரிசிக்கு நிறமூட்டி, செயற்கை மணம் செலுத்தப்பட்டு பிரியாணி அரிசி விற்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தற்போது அரசு உணவு தர பாதுகாப்பு நிர்ணயம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி பாஸ்மதி அரசியில் செயற்கை நிறம் சேர்க்க மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட நிறமூட்டி, அமிலங்களை அரிசியில் சேர்க்கக்கூடாது. இந்த புதிய விதிமுறை வரும் ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.