ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.

பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களும் நடுவானிலேயே வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிந்தி, சியோல் கோட் நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வர்த்தக தலைநகர் காராச்சி துறைமுகத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை தடுக்க முதன்முதலாக S-400 சுதர்சன் சக்ராவை இந்தியா பயன்படுத்தியது 5 லாஞ்சர்கள், ஒரு ரேடார், ஒரு கட்டுப்பாட்டு மையத்தை கொண்டுள்ள எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு உலகின் மிகவும் மேம்பட்ட ஏவுகணை அமைப்புகளில் ஒன்றாகும். 400 கிலோமீட்டர் வரை அச்சுறுத்தலை கண்காணித்து துல்லியமாக இது தாக்கும். ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகளை இந்தியா 35,000 கோடிக்கு வாங்க 2018-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.